தாராபுரம், ஜூன் 27- தாராபுரத்தில் பழ குடோனில் புதனன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பழங்கள் எரிந்து சேதமானது. தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பழ விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பழக்கடைக்கு எம்எஸ்பி நகரில் குடோன் உள்ளது. புதனன்று மதியம் இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி ராஜா ஜெய சிம்மராவ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரண மாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது.