tamilnadu

img

பட்டுப்புழு உற்பத்தி மையத்தில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோபி, மார்ச் 18-  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலாஜி நகரில் பட்டுக்கூடு உற் பத்தி மையத்தில் திடீ ரென ஏற்பட்ட தீ விபத்து  காரணமாக 10 லட்சத்திற் கும் மேலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீவிபத் திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். இவர் தனது தோட்டத்தின் ஒருபகுதியில் கொட்டகை அமைத்து அதில் பட்டுப்புழு உற்பத்தி செய்யும் மையத்தை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி  வருகிறார்.  இந்நிலையில் பாலசுப்பிரமணியம் புதனன்று மதியம் தனது தோட்டத்தின் வேறு பகுதியில் வேலை செய்துகொண்டி ருந்தபோது பட்டுப்புழுக் கொட்டகை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள்  கொடுத்த தகவலின்  அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புவீரர்கள் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பட்டுப்புழு உற்பத்திப் பொருட் கள் மற்றும் கொட்டகை உட்பட ரூ.10 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலானது.  மேலும், இந்த தீவிபத்துக்கான காரணம்  குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.