tamilnadu

img

கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் தீ விபத்து

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

உதகை, பிப். 25- கோத்தகிரி மார்க்கெட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தினசரி மார்கெட் பகுதியில் செவ்வாயன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு இருந்த 10க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து சேதமாகின. இதில் கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை  சுமார் இரண்டு மணி நேரம் போராடிக்  கட்டுக்குள் கொண்டு  வந்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மார்கெட் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட  மின்கசிவு காரண மாகவே இந்த  தீ விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக, கோத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப் பட்டு தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் கள் ஈடுபட்டதால் கோத்தகிரி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
 

;