தருமபுரி, நவ.10- தருமபுரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்பு நடத்தின. இந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஏரி, நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என சார் ஆட்சியர் உத்தரவிட் டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் வெள்ளியன்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தருமபுரியில் மட்டுமல்லாது பாலக்கோடு, மாரண்டஅள்ளி,பென்னாகரம், ஒகே னக்கல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அரூர் சார் ஆட்சியர் பிரதாப் தலைமையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை மீறி 10, +1, +2 ஆகிய வகுப்பு மாணவ, மாணவி களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியது தெரிய வந் துள்ளது. இதையடுத்து அரூர் அருகே உள்ள ஜெயம் வித்யாலயா, விஜய் வித்யாலயா, இஆர்கே, ஐஎம்எஸ் உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில், பள்ளியின் அருகே உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வாரி அவற்றை மேம்படுத்துமாறு சார் ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டு உள்ளார்.