கோவை, ஆக. 28 – தனியார் கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்க ளின் நலனுக்காக இந்திய பொதுத் துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்க மோடி தலை மையிலான அரசு சூழ்ச்சி செய்வ தாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஏழு மாதங் களாக ஊதியம் தரப்படவில்லை. இதனையடுத்து இவ்வூழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதன்ஒருபகுதி யாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் தொழிலாளர்கள் குடும் பத்துடன் தர்ணா போராட்டத்தில் புதனன்று ஈடுபட்டனர். கோவை பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்என் எல்யு மாவட்ட தலைவர் ஏ.முக மதுஜாபர், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பி.வடிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்றினார். இதையடுத்து போராட்டத்தை துவக்கிவைத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய பொதுத்துறை நிறுவ னங்களில் பணியாற்றும் தற்கா லிக ஊழியர்களை பணிநிரந் தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்காக தொழிலாளர் கள் போராடி வந்தனர். தற்போது வேலை செய்த நாட்களுக்கு ஊதி யம் கேட்டு போராட வேண்டிய நிலையை உருவாக்கியுள் ளார்கள். ஏழு மாதங்களாக ஊதி யம் வழங்கவில்லை என்றால், இந்த ஊழியர்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவார்கள். இது மத்திய அரசுக்கு தெரியா தது அல்ல. திட்டமிட்டே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பிஎஸ் என்எல் ஒப்பந்த ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் தராமல் இருந்தால் அவர்களே பணியை விட்டு வெளியேறிவிடுவார்கள். இவர்கள் வெளியேறினால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிகள் முழுமையாக முடங்கும். இதனால் வாடிக்கையாளர்கள் வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நோக்கி செல்வார்கள். இதைத் தான் மத்திய அரசும், மோடியும் எதிர்பார்க்கிறார்கள். 4ஜி, 5ஜி அலைவரிசைகளை ஜியோ போன்ற தனியார் நிறு வனங்களுக்கு அளிக்கும் மத்திய அரசு, தன்னுடைய சொந்த பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைவரிசையை தர மறுக்கும் காரணமும் இதுதான். பிஎஸ்என்எல் நிறுவனத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசின் சூழ்ச்சியை எதிர்கொண்டு பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இந்நிறுவனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை செலுத்தி வருகின்றனர். ஆகவே தான் ஊழியர்களின் பலத்தை குறைப்பதற்கு ஒப்பந்த ஊழியர் களுக்கு ஏழு மாதங்களாக ஊதியம் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். எத்தனையோ இடர்பாடுகளை இந்த தொழி லாளி வர்க்கம் சந்தித்துள்ளது. இதனையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். உங்களு டைய நியாயமான கோரிக்கை யோடு நானும் துணை நிற்பேன். மக்கள் மன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் உங்களுடைய குரலை எதிரொலிப்பேன். இவ் வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்த போராட் டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பிஎஸ்என்எல்யு கோவை மாவட்ட செயலாளர் சி.ராஜேந் திரன், மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் வி.வெங்கட்ராமன் மற்றும் என்.சக்திவேல், என்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சி.வினோத்குமார் உரையாற்றினார். மேலும், இந்த போராட்டத்தில் ஏராளமான பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங் கேற்று கோரிக்கையை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.