தருமபுரி, ஜூலை 26- உபரிநீரை சேமிக்க பாலக்கோடு அருகே உள்ள சின்னாற்று அணையின் மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாற்று அணை 1977 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லி யன் கன அடிகள். நீர்ப்பிடிப்பு பரப்பு 420 ஏக்கர் என மொத்த கொள்ளளவு 50 அடி யாகும். இந்த அணையின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் மூலம் பஞ்சப்பள்ளி ஏரி, பெரியானூர் ஏரி, அத்திமுட்லு ஏரி, செங்கன் பசுவன்தலாவ் ஏரி, தும்பலஹள்ளி அணை, கடத்தூர் ஏரி, ராமக்கா ஏரி உள்ளிட்ட ஏரி கள் நிரம்பும். சின்னாற்றின் மூலம் பாலக் கோடு, பென்னாகரம் தாலுகா பகுதியில் பாசன நீர் தேவை மற்றும் குடிநீர் நீர் ஆதா ரமாக உள்ளது. தருமபுரி நகராட்சி பகுதிக்கு பஞ்சச் பள்ளி அணையில் இருந்து குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட் டத்தில் குடிநீர் மற்றும் விவசாய பணிக ளுக்கு சின்னாற்று நீர் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் அணையில் இருந்து வருடந்தோறும் சுமார் 5 டிஎம்சி தண்ணீர் வழிந்தோடி சின்னாற்று பகுதியான சுமார் 40கி.மீ தூரம் வரை எந்த ஒரு தடுப்பணையும் இல்லாததால் பென்னா கரம் காட்டுப்பகுதியில் நுழைந்து ஒகேனக் கல் ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கின்றது. எனவே, மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை குறைவால் நிலத்தடிநீர் மட்டம் 1500 அடிக்கும் கீழ் சென்று உள்ளது. மேலும் சுமார் 1 லட்சும் ஏக்கர் விவசாய நிலம் தரிசு நிலங்களாக மாறி உள்ளது. விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட இம்மாவட்டத்தில் விவசாயம் பொய்த்து போனதால் பெரும் பாலான விவசாயிகள் கூலி வேலைக்கு வெளியூர்களுக்கு தினந்தோறும் சென்று வரும் அவல நிலை உள்ளது. இதனால் விவாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவரும் சூழ்நிலை உள்ளது. மேலும் நீண்ட கால பயிர்களான தென்னை, மா, பாக்கு போன்றவை முழுமையாக அழிந்து உள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் உபரிநீரை சேமிக்க அணையின் நீர்மட்டத்தை 50 அடியிலி ருந்து 100 அடியாக உயர்த்தினால் கூடுதல் நீர் சேமிக்கவும் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு பயனுள்ளதாக இருக் கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண் டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசிடமும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.