tamilnadu

img

முறையான அளவில் தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கோபி,பிப்.11- கோபிசெட்டிபாளையம் பகுதி யில் செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயில் இரண்டாம் போக பாச னத்திற்கு திறக்கபட்டுள்ள நீர், அரசு  அறிவித்துள்ள அளவில் விநியோ கம் செய்ய வேண்டும் என பொதுப்ப ணித்துறை அதிகாரியிடம் விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக நிகழ்வது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் கீழ் பவானி பிரதான கால்வாய் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்க ராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நேரடி பாசனம் பெற்று வருகிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேல் பவானிசாகர் அணையின் நீர்  மட்டம் 100 அடிக்கும் மேல் உள்ள  நிலையில் அனைத்து வாய்க்கால் களுக்கு இரண்டாம் போக பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பிரதான கால்வாய்க்கு இரண்டாம் போக கடலை பாசனத் திற்கு முறைநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் கீழ்பவானி பிரதான கால்வா யின் கிளை வாய்க்கால்களுக்கும்  இந்த நடைமுறை பொருந்தும் படி அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்நிலையில், கோபிசெட்டி பாளையம் பகுதியில் செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாய் மூலம்  பாசனம் பெறும் யு5, யு6, யு7 ஆகிய  கிளைவாய்க்கால்களுக்கு அரசு வரையறை செய்யப்பட்ட நீரின் அளவை பொதுப்பணித்துறையினர் குறைத்துள்ளது.இதனால் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  ஆகவே, அரசு வரையறை செய்த படி கிளைவாய்க்கல்களுக்கு தண்ணீர்  விநியோகம் செய்ய வேண்டும் என்றும், அரசு அனுமதியளித்தபடி தண்ணீர் திறக்காமல் குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாசன சபைகளின் மூலம் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மா னத்தை கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை  அலுவலரிடம் சமர்ப்பித்து விவசா யிகள் கோரிக்கையாகவும் வலியுறுத் தினர். மேலும், அரசு அனுமதியளித் துள்ள நாட்களில் தண்ணீர் திறக்காமல்  குறைந்த நாட்களே தண்ணீர்  திறக்கப்படுவதால் முழுமையான சாகு படி செய்யப்படாமல் விவசாயி கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும்  வருத்தம் தெரிவித்துள்ளனர்.