tamilnadu

img

உதகை: மண் சரிவால் புதைந்த இருப்பு பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்

மேட்டுப்பாளையம், நவ. 26- உதகையில் ஏற்பட்ட மண்சரிவால் மலைரயில் போக்குவரத்து இரு வார  காலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்த தண்டவாளப் பாதைகளை சீரமைக்கும் பணிகள் அடர்ந்த மலைக்காட்டில் தீவிரமடைந் துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட் டுள்ள இந்த நூற்றாண்டு பழமைவாய்ந்த மலைரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு  மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் வருகை தருகின்றனர். ஆனால் அடர்ந்த மலைக் காட்டின் நடுவே செங்குத்தாக செல்லும் இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவதால் மலைரயிலின் பயணம் தடைபட்டு வரு கிறது.  கடந்த 15 ஆம் தேதி இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலைரயில் செல்லும் ஹில்குரோவ் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் நவ,16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டது. இதன் சீரமைப்பு பணிகள் நிறை வடையும் நிலையில், மீண்டும் பெய்த கன மழை காரணமாக கல்லார் மற்றும் குன்னூர் இடையேயான மலைரயில் பாதையில் சுமார் 23 இடங்களில்  மீண்டும் மண் சரிவு கள் ஏற்பட்டன. இதனால் மீண்டும் மலை ரயில் சேவை நவ24 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வா கம் அறிவித்தது. ஆனாலும் பல இடங்க ளில் ஏற்பட்ட பலத்த மண்சரிவு மற்றும் ரயிலின் இருப்பு பாதை மீது கிடந்த பெரிய  பாறைகளால் சீரமைப்பு பணிகள் தாமத மாகி வரும் நவ.29 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.  இந்நிலையில், அடர்ந்த மலைக்காட் டின் நடுவே ரயில்பாதையின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை ரயில்வே ஊழியர்கள் வெடி வைத்து தகர்த்தினர். பெரும் சப்தத்துடன் பெரிய பாறைகள் வெடித்து சிதறி சிறிய பாறைகளாக மாறிய பின்னர், இவற்றை கயிறுகள் கட்டி இழுத்து அப்புறப்படுத்தினர். மேலும் மண்ணுக்குள் புதைந்து போன இருப்புப்பாதைகள் சீர மைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத பாறை கள் மேலிருந்து உருண்டு விழுந்ததால் சேத மடைந்த மலைரயிலின் பல் சக்கிரம் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்கள் பல்வேறு இடங்களில் சேதமடைந்து துண்டிக்கப்பட்டு கிடந்தன. இதனைய டுத்து இவற்றை மாற்றி புதிதாக பொருத் தும் பணி தற்போது நடைபெற்று வரு கின்றன.  வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள  பனி சூழ்ந்த காட்டுப்பகுதியில் முப்பதிற் கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மழைக்காலங்களில் திடீரென மலைரயில் பாதையில் சரிவுகள் ஏற்பட்டு பயணம் பாதியில் முடிவடைவதால் சுற் றுலா பயணிகள் பலமணிநேரம் நடுக்காட் டில் சிக்கி தவிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மண்சரிவு சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப் படுவதால், ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகள் பெரிதும் ஏமாற் றமடைகின்றனர். இதனை தவிர்க்க, கோடை காலத்திலேயே மண்சரிவு அபாய முள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்களை ஏற்படுத்தினால் மழைக்காலங்களில் ஏற்படும் மண்சரி வுகளை குறைக்கலாம் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.