tamilnadu

img

ஆயிரம் மோடி வந்தாலும் இந்தியர்களின் ஒற்றுமையை சிதைக்க முடியாது மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

கோவை, மார்ச் 8–  ஆயிரம் மோடிகள் வந்தாலும் இந்திய மக்களின் இந்த ஒற்றுமையை சிதைக்க முடி யாது என மதுக்கூர் ராமலிங்கம் குறிப்பிட் டார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா, ஆர்.வெங்கிடு நினைவு தினம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிதியளிப்புப் பொதுக் கூட்டம் சனியன்று கோவை உடையாம் பாளையத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சி.துரைசங்கர் தலைமை வகித்தார். எம்.வெள்ளிங்கிரி வர வேற்றார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம், கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இக்கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றுகையில், எல்லோருடைய மத நம்பிக்கைகள், உணர்வுகளை மதித்து பாது காக்கும் அதேநேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பற் றத் தன்மையை பாதுகாப்பதும் மிக முக்கிய மானது. அதற்கான இயக்கத்தையும் மார்க் சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது.  நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறிக்கொண்டிருக் கிறது. வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு உச்சத்தில் சென்று கொண்டிருக்கி றது. இதனையெல்லாம் தீர்த்துவைக்கிற எந்த திட்டமும் இல்லாமல் மோடி அரசு மக் களை மதரீதியாக பிளக்கும் சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா வருகை தந்தார். இந்திய ஊடகங்கள் அவர் என்ன பேசினார். என்ன ஒப்பந்தம் செய்தார் என்பதை பேசா மல், மாறாக அவர் எதை சாப்பிட்டார் என்கிற விவாதத்தை நடத்தியது. அதில் மாட்டு  இறைச்சியை 18 வகையில் செய்யப்பட்டு  பரிமாறப்பட்டது என்பதும் ஒன்றாகும்.  ஆனால், உள்நாட்டில் மாட்டு இறைச்சி தின் றால் மக்களை அடித்துக்கொல்கின்றனர். மேலும், இந்தியா வந்த டிரம்பிடம் மோடியின் குருவான கோல்வால்கர், கோட்சே குறித்து எதையும் காட்டவில்லை. மாறாக அகமதாபாத்தில் உள்ள காந்தி சமர் மதி ஆஸ்ரமத்திற்குத்தான் அழைத்து செல்ல  வேண்டியது வந்தது. இதேபோல சீன ஜனாதி பதி இந்தியா வந்தபோதும் தமிழகத்தில் உள்ள  மகாபலிபுரம் அழைத்து சென்று பல்லவர் கால சிற்பங்களை காட்டினார். தாஜ்மஹால் அவமானச்சின்னம் என்றார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத். ஆனால் டிரம்ப் வந்தபோது அவரை வரவேற்று தாஜ்மஹாலை சுற்றிக்காட்டிவிட்டு தாஜ் மஹால்  ஓவியத்தைத்தான் தர முடிந்தது. ஏனென்றால் இவர்களிடம் காட்ட ஏது மில்லை. ஆகவே தான் குஜராத் மாநிலம் அக மதாபாத் வந்தபோது அங்குள்ள குடிசை களை மறைக்க சீன நெடுஞ்சுவர் போல சுற்றுச்சுவரை எழுப்பினர்.  உலகையே குலுக்கும் கொரோனா வைராசால் நிகழ்ந்த ஒரே நன்மை மூன்று நாட்களுக்கு ஒரு வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலமாக எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செல்லவில்லை என்பது தான். தற்போது யெஸ் பேங் நோ  கேஷ் என்கிற நிலையில் உள்ளது. அம்பா னிக்கும், அதானிக்கும் கடன் கொடுத்து வங் கியை திவலாக்கியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் ராகவேந்தர் என்பவர் தான் வங்கி  இயக்குநர்களில் ஒருவர். வங்கி திவாலா கப்போகிறது என்பதையறிந்த திருப்பதி தேவஸ்தானம் ரூ.1300 கோடியை இரண்டு நாட்களுக்கு முன்பே எடுத்துவிட்டது. ஆனால் பக்தர்கள்தான் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், தனியார்மயத்தை ஆதரிக்கும் மத்திய அரசு, தற்போது வங்கி திவால் ஆனவு டன் பொதுத்துறை வங்கியோடு சேர்க்க முயற்சிக்கிறார்கள்.  தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லுமா செல்லாத என்கிற விவாதமும், பணத்தை செலுத்திய வங்கி இருக்குமா என் கிற சந்தேகமும்தான் நிலவுகிறது. இவ்வளவு பிரச்சனைகள் உள்ளபோதுதான் இதனை மறைக்க சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என  மக்களை மதரீதியாக பிளவுபடுத்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.  இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத் தின் சிறப்பு என்னவென்றால் தமிழகம் முழுவதும் மோடி அரசின் நாசகர சட்டத்தை எதிர்த்து பெண்கள் போராடிக்கொண்டிருப் பதுதான். மோடி வந்ததால்தான் இஸ்லா மியர்கள் தேசிய கொடி ஏந்தி போராட்டம் நடத்துவதாக சிலர் சொல்கிறார்கள். நமது மூவர்ணக்கொடியை வடிவமைத்தவரே ஒரு  இஸ்லாமியர்தான் என்கிற வரலாற்றை அறியாமல் உலறிக்கொண்டிருக்கின்றனர். இந்திய விடுதலை போராட்டத்தில் இந்து, இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர் கள்  அனைவருக்கும் சரிசமமான பங்கு உள் ளது.  தில்லியில் இஸ்லாமியர் வீட்டிற்கு இந்துத்துவ கும்பல் தீவைத்தது. இதில் சிக்கிய ஆறு இஸ்லாமியர்களை காப்பாற்ற இந்து சகோதரன் பிரேம்நாத் உயிரை பண யம் வைத்து காப்பாற்றினார். இறுதியில் தீக் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஆறு இஸ்லாமியர்களை காப் பாற்றி தனது உயிரை தந்த பிரேம்நாத் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம். இதைப் போன்று கலவர கும்பலை எதிர்கொண்டு சீக்கிய பெருமக்கள் இஸ்லாமியர்களுக்கு அரணாக அணிவகுத்து நின்ற காட்சிகளும் அங்கே நடைபெற்றது. இதுதான் நமது உண் மையான இந்தியா. இது இப்போது ஏற்பட்ட தல்ல இந்திய விடுதலை போராட்டக் காலத் தில் இருந்து காப்பாற்றி வரும் ஒற்றுமை. இதனை ஆயிரம் மோடிகள் வந்தாலும் சிதைக்கமுடியாது என்றார். முன்னதாக, இந்தப் பொதுக்கூட்டத்தில் எஸ்.எஸ்.குளம் பகுதியில் உள்ள வீடுகளில் கட்சியின் வளர்ச்சிக்காக மக்களிடம் சேக ரிக்கப்பட்ட கட்சி நிதி ரூ. 2 லட்சத்தை தலை வர்களிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் வளர்ச்சியில் உடையாம்பாளையம் பகுதி யின் வேர்களாய் நின்றவர்களுக்கும், அவர் களின் வாரிசுகளையும் தலைவர்கள் கௌர வித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் யு.கே.வெள்ளிங்கிரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.புனிதா, சி.விஜயலட் சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.