tamilnadu

ஈரோடு மற்றும் கோவை முக்கிய செய்திகள்

அவசரம் 108 செயலி- ஆம்புலன்ஸ் நிர்வாகம் விளக்கம்

ஈரோடு, பிப்.21- அவசரம் 108 என்ற செயலியை பொதுமக்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்வது எப்படி என ஆம்புலன்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளாது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கூகுள் பிளே ஸ்டோரில் அவசரம் 108 என்ற மொபைல் செயலியை பொதுமக்கள் பதவிறக்கம் செய்து செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண் டும். இதன் பின்னர் பதிவு செய்த செயலி செயல்பட தொடங்கிவிடும். இதனைத்தொடர்ந்து அவசர காலத்தில், இந்த செயலியை உபயோகிக்கையில் அதில் காண்பிக்கும் பட்டனை அழுத்தியவுடன் ஆம்பு லன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு தானாக  சென்றுவிடும். இதன் மூலம் மொபைல் உள்ள இருப்பிடம், ஆகியவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் செல்போனில் தொடர்பு ஏற்பட்டு விடும். இதனால் நோயாளி இருக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைவாக செல்ல முடியும்.  மேலும் அழைப்பவர்களுக்கு சம்பவம் நடந்த இடத்தின் பெயர் தெரியாமல் இருந்தாலும் கூட இந்த  செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு விபத்து நடந்த  இடம் தெரிந்துவிடும். எனவே பொதுமக்கள் அவசரம் 108 ஆம்புலன்ஸ் செயலியை பதவிறக்கம்  செய்து பயனடையுமாறு கூறப்பட்டுள்ளது.

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

 கோவை. பிப். 21 -  கோவையில் குடிபோதையில் மனைவியை  தீ வைத்து கொலை செய்தவருக்கு வியாழனன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், ராமநாதபுரம் ஒலம்பஸ்,  நஞ்சப்பா தேவர் தெரு, பகுதியில் வசிப்பவர்  தண்டபாணி (53), கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (48), என்ற மனைவி இருந்தார்.மேலும், 13 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே  தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகி றது. கடந்த  2016 ஆம் ஆண்டு இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியதில் குடிபோதையில் இருந்த தண்டபாணி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி  தீயை பற்ற வைத்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை கோவை ஒருங்கி ணைந்த நீதிமன்றம் 4 - வது கூடுதல் அமர்வில் நடை பெற்று வந்தது. அதன் தீர்ப்பு வியாழனன்று  கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட  தண்டபாணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000  அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தனியார் பள்ளிகளில் இரவு நேர பயிற்சி வகுப்பை தடுக்க நடவடிக்கை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

கோபி. பிப்.21- 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் இல்லை என்றும், தனியார் பள்ளிகளில் இரவு பத்து மணிக் குமேல் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த போது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நான்கு கட்டங்களாக செயல்ப டுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  மேலும், 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் இல்லை என்றும், தனியார் பள்ளிக ளில் இரவு பத்துமணிக்கு மேல் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுக்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் மனஅழுத்தத்தோடு வாராமல் மகிழ்ச்சியோடு வாருங்கள் என்று தனது வாழ்த்துகளையும் தெரி வித்தார்.

 

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி, பிப். 21- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புயல்  நிவாரண மைய கட்டிடத்தில் இன்று  சிறப்பு  வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளததாவது, உதகை மாவட்ட நிர்வாகம், உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் ஆகியவை  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்து டன் இணைந்து வருகின்ற பிப்.22 ஆம் தேதியன்று(சனிக்கிழமை), கோத்தகிரி  புயல் நிவாரண மைய கட்டிடத்தில் சிறப்பு  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இம்முகாமானது 10ஆம் வகுப்பு முதல் இளநிலை மற்றும் முதுகலை  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு தனியார்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், இம்முகாமானது காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன டையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

மாணவனை கொன்று செல்போன் பறித்த 6 பேர் கைது

கோவை. பிப். 21-  கோவையை அடுத்த சூலூர் பகுதியில் மாணவனை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்று செல்போனை பறித்து சென்ற கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த அரசூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20). இவர் கோவில் பாளையம் பகுதியில் உள்ள  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன் றாம் ஆண்டு படித்து வந்தார். பிப்ரவரி 16-ஆம் தேதியன்று கல்லூரி முடிந்தவுடன் தமிழ்செல்வன்  வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவரை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொண்டு, சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு மறைந்தனர். இதனைத்தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தமிழ்செல்வனை மீட்டு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்ததாக கூறினர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சூலூரை அடுத்த பல்லடம் செல்லும் சாலையில் உள்ள ஒரு  பாலத்திற்கு அடியில் குற்றவாளிகள் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு  மறைந்திருந்த 6 பேரை கைது செய்த னர். அவர்களிடம் விசாரணை செய்தபோது இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது  தாங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்ட னர்.  இவர்களில், கோவை மசக்களிபாளை யம், பெரியார் நகர் பகுதியில் வசிப்ப வர் மோகன் (21), இவர் மீது சிங்காநல்லூர்  போலீஸ் காவல் நிலையத்தில் 4-க்கும்  மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி  மற்றும் கஞ்சா பொருட்கள் கடத்தல் வழக் குகள் உள்ளன. அதேபோல் இடையர்  பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20),  கோவை பீளமேடு சேர்ந்த சூர்யா (19),  வெள்ளலூரைச் சேர்ந்த விஜயகுமார் (21),  கோவை ஒண்டிபுதூர் கணேஷ் வெற்றி வேல் (20), கோவை வெள்ளலூர் மோகன் ராஜ் (18), ஆகிய 6 பேரிடம் போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.  இந்த நிலையில் அவர்கள் கொலைக்கு  பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள்  மற்றும் கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப் பட்டது. இவர்கள் பிரபல கொள்ளை  மற்றும் கஞ்சா கடத்தி மாணவர்களிடம் விற்பனை செய்யும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது.