tamilnadu

ஈரோடு: ஸ்டவ் வெடித்ததில் பெண் பலி

ஈரோடு, நவ. 17- ஈரோட்டில் ஸ்டவ் வெடித்த விபத்தில் ரயில்வே பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின் றனர். ஈரோடு கள்ளுக்கைடமேடு ஈ.வி.ஆர்.வீதியை சேர்ந்த வர் சாகர் ரகுநாத் (27). இவருடைய மனைவி ஷர்தா (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் ஷர்தா ஈரோடு ரயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் பயிற்சி ஊழியராக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஷர்தா வீட்டில் இருந்த போது காபி போடுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத வித மாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து அவர் மீது தீப்பிடித்தது. இதில் ஷர்தாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து படுகாயமடைந்த ஷர்தாவை அவரது கணவரும், அருகிலிருந்தவர்களும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷர்தாவுக்கு 90 சதவிகித தீக்காயத் துடன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் ஞாயிறன்று காலை சிகிச்சை பலனின்றி ஷர்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு  சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.