கோவை, ஜூலை 1- சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து கோவை வடவள்ளியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அனுமதி யின்றி போராட்டம் நடத்திய தாக அனைவரும் கைது செய்யப் பட்டனர். தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வடவள்ளி பகுதி யில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 15 தினங்க ளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதைக்கண்டித்து பேருந்து நிலையம் முன்பு திமுக செயலாளர்வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில் காங்கிரஸ் பகுதி செயலாளர் ரங்க நாதன், சிபிஎம்தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ்சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாந கராட்சியைக் கண்டித்தும், அமைச் சர் எஸ்.பி.வேலுமணிபதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்றனர்.இதற்கெதி ராகப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்புஏற்பட்டது. இதன் பின்னர் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.