திருவள்ளூர், மே 13- ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராதவர்க ளுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து செவ்வாயன்று (மே12) வட சென்னை அனல் மின் நிலையம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1 மற்றும் 2ல் ஆயிரத்து200 ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். ஊரடங்கு காலத்தில், 33 விழுக்காடு ஊழியர்களுடன் அத்தியாவ சிய பணிகளை செய்ய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராதவர்களின் சம்பளத்தை ஒப்பந்ததாரர்கள் பிடித்தம் செய்துள்ளனர்.இது குறித்து அனல் மின் நிலைய நிர்வா கமும் கண்டுகொள்ளவில்லை. எனவே முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும், வேலை நேரத்தை 12மணி நேரமாக உயர்த்து வதை கைவிட வேண்டும், மின்சார மசோதா 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிஐடியு திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே. விஜயன், வடசென்னை அனல் மின் நிலைய கிளை செயலாளர் எஸ்.சுந்தரம், தலைவர் இ.ஜெயவேல், வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 2 தலைவர் வெங்கட் டையா உள்ளிட்டோர் பேசினர்.