எல்ஐசி ஊழியர் மாநாடு வலியுறுத்தல்
சென்னை, நவ. 11 - எல்ஐசி பாலிகள் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (சென்னை பகுதி-1) 62வது மாநாடு நவ.9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில், ஊழி யர்களுக்கு 40 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம், கூட்டுபேர உரிமை வழங்குவ தோடு, எல்ஐசி நிர்வாகக் குழுவில் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், 1.4.2010க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்க ளுக்கும் நடைமுறையில் உள்ள பென்சன் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும்,
2013 ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டபடி சென்னை கோட்டம் -1, 2க்கான பதவி உயர்வுகள் உள்ளிட்ட நடை முறைகளை தனித்தனியே பிரிக்க வேண்டும், வாரம் 5 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலியாக உள்ள எஸ்டி பிரிவு, மூன்றாம் பிரிவு ஊழியர்கள் பணியிடங்க ளுக்கு சிறப்பு பணி நியமனம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பின்னடைவு இடங்களை உடனடியாக நிரப்ப நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. மாநாட்டிற்கு பகுதித் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் கே.வேணுகோபால், தென்மண்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் பி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், பொரு ளாளர் எஸ்.சிவசுப்பிர மணியம், சென்னை பகுதி-2ன் பொதுச் செயலாளர் எம்.தனசெல்வம், சென்னை பகுதி-1ன் இணைச் செயலாளர்கள் டி.ரமேஷ் கே.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். அமைப்பின் தலைவ ராக ஜி.ஜெயராமன், பொதுச் செயலாளராக எஸ்.ரமேஷ்குமார், பொரு ளாளராக கே.ஸ்ரீதர் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.