சேலம், ஆக.30- கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவ சாயிகள் வலியுறுத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய சலுகைகளை அரசு அதிகாரிகள் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். கூடமலை அரசு பள்ளியில் மதில் சுவர் இடிந்து உள்ளதால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அங்கு உடனடியாக மதில் சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதி காரிகள் பங்கேற்றனர்.