அரூர், செப்.29- அரூர் நகர் குடியிருப்பு பகுதிகளில் தூய்மைப் பணி களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 16வது வார்டு புதிய காலனியில் 500-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வீடுகள் இல்லாத காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில் முள் புதர்கள் மண்டி உள்ளது. இந்த முள்புதர்களில் ஏராளமான நெகிழிப் பொருள்கள், குப்பைகள் உள்ளன. இதனால் கொசு உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ள பகுதியை நிலத்தின் உரிமையாளர்கள் தூய்மை செய்வதில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், நில உரிமையாளர்கள் தான் தூய்மை செய்ய வேண்டும் என கூறுகின்றனர். இதனால், புதிய காலனியில் குடியிருப்ப வர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள முள்புதர்கள், நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.