உளுந்தூர்பேட்டை, நவ. 8- உளுந்தூர்பேட்டை நகரத்தில் உ.கீரனூர் பகுதியில் செயல்பட்டு வந்த பொது சுகா தார வளாக கட்டிடம் சேதமடைந்ததால் இடிக் கப்பட்டது. இதனை உடனடியாக மீண்டும் கட்டிக் கொடுக்கக் கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பேரூ ராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக் கப்பட்டது. உ.கீரனூர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த சுகாதார வளாகம் பழுதடைந்து இருந்தது. இப்பகுதி வாலிபர் சங்கத்தினரும், பொது மக்களும் இதனை புதுப்பித்து தரக் கோரிக்கை வைத்தனர். அதன் காரணமாக ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளா கம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. பின்னர் சேதமடைந்த கட்டிடம் இடிக் கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதன் காரண மாக பணிகள் நடைபெறவில்லை. பின்னர் இடைத்தேர்தல் நடை முறைகள் விலக்கப் பட்ட பின்னரும் பணி தொடங்கப்படாததால் இதனைப் பயன்படுத்திவந்த பெண்களும், பொதுமக்களும் மிகப் பெரும் அவதி அடைந்தனர். எனவே, அந்த பணிகளை உடனடியாக துவக்கி சுகாதார வளாகத்தை கட்டிக் கொடுக்கக்கோரி வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, நகரச் செயலாளர் இ.சதீஷ்குமார், கிளைச் செயலாளர் ஏ.ராமராஜன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். உடனடியாக பணிகளை துவங்கு வதாக பேரூராட்சி செயல் அலுவலர் வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.