tamilnadu

img

ரயில் மோதிய விபத்தில் யானை பலி

கோவை, டிச.25- தமிழக கேரளா எல்லையில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் ஆண் யானை ஒன்று பலியானது.  கோவையிலிருந்து பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் பாதை சுமார் 24 கிலோ மீட்டர் அடர்ந்த வனப் பகுதிக்குள் அமைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வன விலங்குகள் இரயில் பாதையைக் கடக்கும் என்ப தால் ரயில்கள் மிகக்குறைந்த வேகத்தில் செல்ல வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ரயில்க ளும் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சூழலியல்  ஆர்வலர்கள் கூறி வந்தனர். ஏனெனில் கடந்த 17 ஆண்டு களில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில்  அடிபட்டு உயிரிழந்ததால் கேரள மாநிலம் கஞ்சி கோடு வரை 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், செவ்வாயன்று இரவு தமிழ்நாடு-கேரள எல்லையான ஆரங்கோட்டுகுளம்பு என்ற இடத்தில் ஆண் யானை ரயில் பாதையை கடந்துள்ளது. அப்போது கேரளாவில் இருந்து அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் யானை மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யானை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனையடுத்து ரயில் ஓட்டுனர் பாலக்காடு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சென்றனர். சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் காலையில் கேரள வனத்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இதில் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆண்  யானைக்கு 20 வயது இருக்கலாம் என்றும், ரயில் வேகமாக வந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி கேரளாவில் இருந்து வந்த ரயில் மோதி இப்பகுதியில் 10 வயதுள்ள ஆண் யானை உயிரி ழந்துள்ள நிலையில் மீண்டும் அதே பகுதியில் ரயில் மோதி மற்றொரு யானை உயிரிழந்துள்ளது. இது சூழலி யல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவையிலிருந்து பாலக்காடு வரை உள்ள வனப்பகுதி யானைகள் காப்பகமாக உள்ளதாகவும், கடந்த 2002ஆம்  ஆண்டு முதல் தற்போது வரை 28 யானைகள் ரயில் மோதி  உயிரிழந்துள்ளது. ரயில்கள் கேரளாவிலிருந்து வரும் போது ரயில் ஓட்டுநர்கள் மித வேகத்தைக் கடைப்பிடிப்ப தில்லை எனவும், இதனால் வன விலங்குகள் அடிபட்டு பலியாவதாகவும் குற்றம் சாட்டினர்.

;