tamilnadu

img

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: உறவினர்கள் சாலை மறியல்

உடுமலை, ஆக. 6- உடுமலை அருகே வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். இத னால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் தனியாருக்குச் சொந்தமான கட்ட டத்தில் கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது. இதில் கான்க்ரீட் கலவை மின்இயந்திரத்தின் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த கண்ணம நாய்க்கனூா் பகுதியைச் சேர்ந்த பழனி சாமி மகன் செல்வகுமார்(24) என்பவா் வேலை செய்து வந்தார். செவ்வாயன்று மாலை 4 மணியளவில் இயந்திரத்தி லிருந்து மின்சாரம் தாக்கி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அருகிலிருந்த தொழிலாளர் கள் ஆம்புலன்சை வரவைத்து உடு மலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இரவு 7 மணி யாகியும், கட்டிட உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் வராததால் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் உடுமலை- பொள் ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். கொட்டும் மழையிலும் இறந்த தொழிலாளியின் மரணத்திற்கு உரிய இழப்பீடும், நடவடிக்கையும் கோரி மறியலைத் தொடர்ந்தனர்.