உடுமலை, மார்ச் 3- உடுமலை அருகே மின்வாரிய அதிகாரி கொலை செய்யப்பட் டார். உடுமலை அருகே கிளுவன்காட்டூர் 110 கிலோவாட் மின்திறன் கொண்ட துணைமின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இம் மின்நிலையம் மானுப் பட்டி மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் சுழற்சி முறையில் 3 ஷிப்டில் பணியாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு உதவி செயற்பொறியாளராக பணியில் இருந்த உடு மலை எஸ்.வி.புரம்பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் மணிபிரபு (36) என்பவருக்கும், வயர்மேனாக பணியாற்றிய கொழுமம் மேட்டுத் தெருவை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் கண்ணன்(48) என்பவருக்கும் பணியில் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. அப்போது கண்ணன் காப்பர் கட்டையால் தலையில் பலமாக தாக்கியதில், மணிபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு வந்த குமரலிங்கம் காவல் துறையினர் மணிபிரபு வின் உடலை பிரேத பரி சோதனைக்காக உடு மலை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.