tamilnadu

img

மும்முனை மின்சாரம் தேவை - பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, பிப். 12- அவிநாசி அருகே மின் வாரிய அலுவலகத்தில் புத னன்று குறை தீர்ப்பு கூட்டத்தில் மும்முனை மின்சா ரம் தேவை என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அவினாசி ஒன்றியம், குப்பாண்டபாளையம், துலுக்கமுத்தூர், அய்யம்பாளையம் ஆகிய பகுதிக ளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்முனை மின்சாரம் இல்லாத காரணத் தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு தொழில்கள் மிக வும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இதைத் தொடர்ந்து தொழில்கள் பாதுகாக்கும் வகையில் மும் முனை மின்சாரம் தேவை என அப்பகுதி பொது மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். இது குறித்து மனுவைப் பெற்றுக் கொண்ட மின்சார வாரிய அதிகாரிகள் விரைவில் கோரிக்கை நிறை வேற்றப்படும் என தெரிவித்தனர்.