tamilnadu

img

குண்டும் குழியுமான மின்சாரத்துறை அலுவலக நுழைவு -பொதுமக்கள் அவதி

 பொள்ளாச்சி, ஏப். 24-பொள்ளாச்சி மின்சாரத்துறை அலுவலக நுழைவு வாயில் குண்டும் குழியுமாக உள்ளதால் மின்நுகர்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி சின்னாம்பாளையம் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் பாதை மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இங்கு மின் கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.இப்பாதை கரடு முரடாக உள்ளதால் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் பழுதடைகிறது. மேலும் இவ்வழியில் உள்ள கற்களினால் விபத்து மற்றும் காயமும் அடைகின்றனர்.ஆகவே இப்பாதையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;