tamilnadu

img

நீட் தேர்வு: 8 மாணவிகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்

சென்னை, ஜூன் 7 - நீட் தேர்வு தோல்வியால் இறந்த 8 மாணவி களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் முழக்க மிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி  சனிக்கிழமையன்று (ஜூன் 7) சென்னையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இப் போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் வீ.மாரியப்பன் கூறியதாவது: நீட் தீர்வு என்ற பெயரால் மத்திய மாநில அரசுகள் மாணவர்களை படுகொலை செய்கின்றன. நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு விலக்க ளிக்கலாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றமும், மருத்துவக்கல்வியில் மாநில அரசு மட்டுமே முடிவெடுக்கலாம் என்று கூறியிருக்கிறது. மேலும், நீட் விலக்கு கோரி தமிழக சட்ட மன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவையெல்லவற்றையும் மீறி மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மீறி வருகிறது. நீட் தேர்வால் கடந்த 3 ஆண்டுகளில் அனிதா, சிவசங்கரி, பிரதீபா, யுவஸ்ரீ, சந்தியா,  ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா என  8 மாணவி களும், 2 பெற்றோரும் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இந்த படுகொலைகளுக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் போராட்ட களத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்போராட்டத்தில் மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் உம்மென், நிர்வாகி கள் நிருபன் சக்கரவர்த்தி, தீ.சந்துரு, இசக்கி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.