tamilnadu

img

கல்விக்கு வரி கட்டும் நாம் தனியாக கல்வி கட்டணம் ஏன் செலுத்த வேண்டும்?

கோவை, ஜூலை 28– எந்த பொருட்களை வாங்கினா லும் கல்விக்கும் சேர்த்து வரியை கட்டுகிற நம்மிடம், கல்விக்கென தனியாக கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பினார். புதிய கல்வி கொள்கைக்கு எதி ராக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஞாயிறு அன்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கடை மைதானத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந் திரபாபு இவ்வியக்கத்தை துவக்கி  வைத்து உரையாற்றினார். அப்போது கூறுகையில், இந்திய நாட்டில் 2005 வரையிலும் கல்விக்கு  என்று தனியாக வரி ஏதும் கட்டிய தில்லை. அதன் பிறகு எந்த பொரு ளைவாங்கினாலும் அதில் கல்விக் கான வரியும்சேர்த்து செலுத்துகி றோம். மக்கள் கல்விக்கு வரி கட்டிய பிறகு, கல்வி நிலையங்களில் தனியாக கல்விக்கென ஏன் கட்ட ணம் கட்ட வேண்டும் கல்விக்கு அரசு தான் செலவு செய்ய வேண் டும்.

அரசு நிதி ஒதுக்காமல்  போனால் கல்வி நிலையங்கள் நூலகங்கள், முதியோர் இல்லங்க ளாக மாற்றும் ஆபத்து உள்ளது. இன்று உள்ள நடைமுறையில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சென்று பட்டம் வாங்கி ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல முடியும். அந்த வாய்ப்பை இந்த கல்விக்கொள்கை மறுக்கிறது.    புதிய கல்வி கொள்கை ஆவணத் தில் தற்போது உள்ள கல்வி கொள் கையில் குறை இருப்பதாக எங்கும் சொல்ல வில்லை. அப்படியெனில் தற்போது உள்ள கல்வி கொள்கையை தகர்ப்பதன் நோக்கம் என்ன? மூன்று நான்கு வயது குழந்தைகளுக்கு தேர்வும், தொழிற்பயிற்சியும் ஒரு  சேர அளித்து சவாலை உருவாக்கு வது என்ன நியாயம்? மண்பாண்டம் செய்வது, தச்சு வேலை செய்வது, மூட்டை தூக்குகிறவரின் குழந்தை மூட்டைதான் தூக்க வேண்டும் என் கிற சிந்தனை உருவாக்குவதன் சூழ்ச்சி இது.  கூட்டாட்சியின் அடிப்படையில் மாநில அரசுக்கு உரிமை இருந்த தால்தான் கர்மவீரர் காமராஜர் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்க பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலை பள்ளியை துவக்கினார். கோவை மருத்துவ கல்லூரியை அரசு மருத்துவ கல்லூரியாக மாற் றினார். இது அத்தனையும் மாநில  அரசின் வசம் கல்வி இருப்பதுவரை தான் நீடிக்கும். தற்போது அறிவிக் கப்பட்டுள்ள இந்த கல்வி கொள்கை யில் அனைத்து அதிகாரத்தையும் பிரதமர் தலைமையிலான ஒரு குழுவே முடிவு செய்யும் என்கிறது.

அப்படியென்றால் இது இந்திய அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்திய அரசமைப்பு சட்டத்தினையே மாற்ற சொல்லக்கூடிய அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார்.  சமமான கற்றல் வாய்ப்பு, அரசு பள்ளிகளை பலப்படுத்த வேண்டும், கல்லூரிகளை மூடாதீர்கள் என்பதற் காகத்தான் இந்த இயக்கத்தை மார்க் சிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்திய கல்வியை பாதுகாத்திட அனைவ ரும் ஒன்றிணைந்து போராடி பாது காப்போம் என்றார். இந்நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோக ரன், சிங்கை நகர செயலாளர் வி. தெய்வேந்திரன், பீளமேடு நகரக் குழு செயலாளர் கே.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். முன்னதாக இந்த பிரச்சார இயக்கம் காய்கடையில் துவங்கி ஆவராம்பாளையம், பீளமேடு உள் ளிட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற் றது.   இதேபோல கோவை எஸ்எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட நேரு நகர், சேரன்மாநகர், விளாங்குறிச்சி, சின்னவேடம்பட்டி மற்றும் உடை யாம்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால் தலைமை யில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், ஒன்றியகுழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், சண்முக சுந்தரம், ராமகிருஷ்ணன், பால முரளிமற்றும் சந்திரசேகர் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.