tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

கோவை, அக். 17 - கோவை விளாங்குறிச்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள வி.கே.ஆர் பகுதி யின் முற்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழிந்து ஓடி வந்தது. இதனால், அப்பகுதியிலுள்ள சாலைகள் நீரில் முழ்கி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உருவானது. ஆகவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலி யுறுத்தி வெள்ளியன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.