கோவை, அக்.21 – தீக்கதிர் செய்தி எதிரொலியாய் இரு மாதமாக சுத்தம் செய்யப்படாத சாக்கடைக் கழிவுகளை மாநகராட்சி நிர்வா கம் அகற்றியது. கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள பழையூர் அருகே தண்டாயுதபாணி வீதி மற்றும் அதனை சுற்றி அருந்ததிய மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்ற னர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதிகளை மேற்கொள்ளா மல் இருப்பதுடன், சாக்கடை கழிவுகளை அகற்றுவ தில்கூட பராபட்சம் காட்டி வருவது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீக்கதிர் நாளிதழிலில் செய்தி வெளி யாகி இருந்தது. இச்செய்தியின் எதிரொலியாக செவ்வா யன்று அப்பகுதியில் உள்ள சாக்கடைக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி முழுமையாக அகற்றியது. இத னால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.