tamilnadu

img

அனுமதியின்றி செயல்படும் சாய ஆலை : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அவிநாசி, ஆக. 6- அவிநாசியை அடுத்த புதுப் பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு aவரும் சாய ஆலை யின் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என வலியு றுத்தி மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம், புதுப் பாளையம் ஊராட்சி, கணியாம் பூண்டி பகுதியைச் சேர்ந்த பழனி சாமி என்பவர், மாவட்ட மாசுகட்டு பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறி யாளருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது; புதுப்பா ளையம் பூலங்காட்டு தோட்டத் தில் சாய பிரிண்டிங் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையைச் சுற்றி, விவசாய விளை நிலங்கள் உள்ளன. சாய ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நிலத்த டியில் விடுவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு வருறது. இதனால் விவ சாயம், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆலையின் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்முருகனிடம் கேட்டபோது, புதுப்பாளையம் பகுதியில் சாய அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்  என அவர் தெரிவித்தார்.