tamilnadu

img

கோவையில் கொரோனா தொற்று காரணமாக 5 காவல் நிலையம் மூடல்

கோவை, ஜூலை 16- கோவை உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்க ளுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக் கரை உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அந்தந்த காவல்நிலையங்கள் மூடப்பட்டன.  

இந்நிலை யில், கடந்த சில தினங்களுக்கு முன் உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு காய்ச் சல் இருந்துள்ளது இதனால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இடத்தில் அவருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், புதனன்று இரவு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோவை கொடிசியாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார்.

இந்நிலையில் அவருடன் பணிபுரிந்த மற்ற காவ லர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. இதனால் கோவை உக்கடம் காவல் நிலையம் மூடப் பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் காவல் நிலையம் தற்காலிகமாக கோவை வின் சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் சமூகக் கூடத்தில் செயல்பட ஆயத்தபணிகள் நடந்து வருகிறது.