கோவை. பிப், 15 – கோவை பகுதியில் எல்எஸ்டி என்கிற போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் கஞ் சாவை விற்பனை செய்த மூவர் வெள்ளி யன்று கைது செய்யப்பட்டனர். கோவையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு போதை மருந்து தடவிய வில்லைகள்(ஸ்டாம்புகள்) மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இந்நிலையில் போதைப் பொருட்கள் தடுப்ப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்டுக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்தது.அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சரவணன் உட்பட தனிப் படையினர், கோவை மயிலேரிபாளை யம் கல்லூரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர்களிடம் எல் எஸ்டி எனும் போதை மருந்து தட விய அட்டை வில்லைகள் மற்றும் 1 கிலோவிற்கு மேலாக கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட் டது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்தபோது கேரளாவைச் சேர்ந்த ஷாஜி மகன் பிலால் (22), ஹரிபிர சாத் மகன் அர்ஜூன் பிரசாத் (22) மற்றும் கங்காதரன் மகன் சாரங் (22) என்பது தெரியவந்தது. இவர்கள், கேரளாவில் இருந்து மொத்தமாக இந்த போதை பொருட்களை தொடர்ந்து கோவை பகுதிக்கு கடத்தி வருவதும், இதனை விற்பனை செய்வ தற்கு கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து, காவல் துறை யினர் குற்றவாளிகளை இரவு நீதிபதி வீட்டில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.