tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை கைவிடுக!

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.25- தஞ்சை அரசு போக்குவரத்துக் கழக புறநகர் கிளையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்  கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகி த்தார். சிஐடியு மத்திய சங்க துணைச் செயலா ளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். போக்குவரத்துக்கழக நகர பணிமனை முன்பு  தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு துணைத் தலைவர் வி. திருநாவுக்கரசு, ஏஐ டியுசி மாநிலத் துணைச் செயலாளர் துரை.மதிவா ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எட்வின் பாபு தலைமை வகித்தார். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288-ஏ-வை கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாட கைக்கு எடுக்கும் முறையை புகுத்தக் கூடாது. போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி  வழங்க வேண்டும். தொழிலாளியிடம் பறிக்க ப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு  பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உட னடியாக வழங்க வேண்டு என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி 

திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து சங்க கூட்டமைப்பு, ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பாக தொமுச மத்திய சங்க தலை வர் அடைக்கலம் தலைமை வகித்தார். அறந்தா ங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக சிஐ டியு, கிளைச் செயலாளர் செந்தில்நாதன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.