tamilnadu

img

அதிக உப்புத்தன்மை கொண்ட குடிநீரை அருந்துவதால் ஏற்படும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 22- அதிக உப்புத்தன்மை கொண்ட குடிநீரை அருந்துவதால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை  தடுக்க தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு, ஆதிதிராவிடர் காலனி, போர் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் கடைசி எல்லையான இப்பகுதியில் வசித்து வரும் மக்க ளுக்கு விவசாயம் தொடர்பான வேலைகள் இல்லை. வாழ்வாதா ரத்தை பூர்த்தி செய்ய கிடைக் கின்ற வேலையை செய்து வாழ்ந்து வரு கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் அங்குள்ள போர்வெல் மற்றும் கிணறுகளில் கிடைக்கின்ற உப்புத்தன்மை மிகுந்த தண்ணீரை கொண்டு சமைப்பது, தண்ணீர் பருகுவது போன்றவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 வயது முதல் 40 வயது வரையுள்ள 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 26 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் உள் ளிட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பலர் ரத்த பரிசோத னைகளும் செய்துள்ளனர். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத வகையில் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை உடல் மற்றும் மனரீதி யாக கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மேட்டூர்- ஆத்தூர் காவிரி  கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வீர கனூரில் இருந்து லத்துவாடி வழி யாக கிழக்கு ராஜபாளையம் கிரா மத்திற்கு பைப் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஆனால் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள லத்துவாடியில் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையீடு செய்து கிழக்கு ராஜபாளையத்திற்கு காவிரி குடிநீர் விநியோகிக்க போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மக் கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து  தமிழக முதல்வர், அமைச்சர்கள், அர சுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை குடிநீர் வடி கால் வாரியம் மாவட்ட நீரியல் நிபு ணர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் புகார் அளித்த னர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்ப டுத்தும் வகையில் லத்துவாடியில் இருந்து கிழக்கு ராஜபாளையம் பகுதிக்கு காவிரி குடிநீரை கொண்டு செல்ல வேண்டும். இங்குள்ள ஆழ் துளை கிணறுகள் மற்றும் நீர் நிலை களை பரிசோதனை செய்ய வேண் டும். பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மருத்துவ அலுவ லரை நியமித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதி குமார் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார், எம்.குணசேகரன், ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், ஜோதிவேல் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.