tamilnadu

காங்கேயம் சாலையில் குடிநீர் இன்றி தவிப்பு: காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், ஜூலை 24 - திருப்பூர் மாநகராட்சியை ஒட்டி காங் கேயம் சாலை சுற்று வட்டார கிராமங்களில் மூன்று மாதங்களாக குடிநீர் கிடைக்காத நிலையில் கோபாவேசம் அடைந்த மக்கள் திருப்பூர், திருச்சி செல்லும் காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம் பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில்  1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த 3 மாத  காலமாக குடிநீர் வழங்கவில்லை, குடிநீர் சீராக வழங்க கோரியும், பல இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ள பகுதிகளில் குடிநீர்  வசதி செய்து தர கோரியும் பல முறை விண்ணப்பித்தும் எந்த பயனும் இல்லை. மாவட்ட நிர்வாகமோ, உள்ளாட்சி அமைப்புகளோ இதுவரை எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காத காரணத்தி னாலும், அரசு உடனடியாக சீரான குடிநீர் வழங்க கேட்டும், நிரந்தரமாக குடிநீர் வசதி  ஏற்படுத்தி தர கோரியும் 300-க்கும் மேற் பட்ட மக்கள் காங்கேயம் சாலையில் நாச்சி பாளையம் பகுதியில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்  ஒருவர் அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் படுத்து அரசு உடனடியாக குடிநீர்  வழங்க வேண்டும் என ஆவேசமாக குரல் கொடுத்தார். இந்த போராட்டத்தினால் காங்கேயம் - திருப்பூர் சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. பொதுமக்கள் சாலை மறியல் செய்து வரும் தகவல் அறிந்ததும் அவினாசி பாளையம் காவல்துறையினரும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து  சென்றனர்.