திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் அருகே சாலையோரம் குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் விரயமாகிக்கொண்டு இருக்கிறது. மாநக ராட்சி நிர்வாகம் குடிநீர் விரயத்தைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர் செவ்வாயன்று, குடிநீர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நீரில் மூழ்கி குளித்தார். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் விரயத்தை தடுத்து நிறுத்த வேண்டும், உடைப்பைச் சரி செய்ய வேண்டும் என்று வலியு றுத்தி இவ்வாறு தான் செய்ததாக சந்திரசேகர் கூறினார்.