கோவை, மே. 7- மத்திய, மாநில அரசுகளை கண் டித்து திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார் பில் கருப்பு சின்னம் அணிந்தபடி வியாழனன்று கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. கொரோனா தடுப்பு நடவடிக் கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும். வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப் பாளி மக்களின் குறைந்தபட்ச இருப் பைக்கூட பறிப்பதற்கு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்த மாநில அரசை கண்டித்து திமுக தோழமை கட்சிகளின் சார்பில் மாநி லம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத் திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், கோவை மாவட்டத் தின் சிங்கை, கிழக்கு, மேற்கு, வடக்கு, மதுக்கரை, தெற்கு மாநகரம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், எஸ்எஸ். குளம், மேட்டுப்பாளையம், சூலூர், ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட தாலுகா, ஒன்றிய பகுதிகளில் கட்சி அலுவலகங்கள் மற்றும் அவரவர் வீடுகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன.
தருமபுரி
தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச்சந் திரன், சோ.அருச்சுணன், தருமபுரி நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கே.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்து, மாவட்ட குழு உறுப்பினர் பி.மாது மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் குமரன் சாலை, டி.எஸ்.சபாபதிபுரம் சாலை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி மற்றும் காங்கிரஸ் சார்பில் கோபால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். ஊத்துக்குளி சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி. கே.சுப்பராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகரா ஜன், மதிமுக மாநகர் செயலாளர் சு.சிவ பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகமான தியாகி பழ னிச்சாமி நிலையம் முன்பாக நடை பெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா ளர் எஸ்.ரவிச்சந்திரன், திமுக சார்பில் கணேசன் காங்கிரஸ் கட்சி சார்பில் வி.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், அவிநாசி , தாரா புரம், உடுமலை, உள்ளிட்ட மாவட் டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுக ளின் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலு வலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. இராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.குழந்தைவேல், எம்.சேதுமாத வன், எம். குண சேகரன், வடக்கு மாநகர செயலா ளர் எம்.பிரவீன்கு மார், அலுவலக செயலாளர் எஸ்.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சேலம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகமான வி.பி.சி.நினைவகம் முன்பு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமையில் கருப்பு கொடிபிடித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிபிஐ மாவட்ட குழு அலுவ லகம் முன்பு மாவட்ட செயலாளர் ஏ. மோகன் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலா ளர் எஸ். ஆர். சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மதிமுக செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி களை சார்ந்த தலைவர்கள் கருப்பு கொடி பிடித்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதேபோல், சேலம் மாவட்டத்தில் சேலம் தாலுகா, மேற்கு, வடக்கு, வாழப்பாடி, நங்வள்ளி, மேட்டூர், ஓம லூர், மேச்சேரி, ஆத்தூர், பெத்தநா யக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் கருப்பு கொடி ஏந்தி கண்டன இயக்கங்கள் நடைபெற்றன.