tamilnadu

img

தலித் உடலை புதைக்க எதிர்ப்பதா?- ஆட்சியர் தலையிட தீ.ஒ.முன்னணி மனு

கோவை, செப். 9 –  கோவையில் பொது மயானத்தில் தலித் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரத் தில் மாவட்ட ஆட்சியர்  தலையிடக்கோரி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியினர் மனு அளித்தனர். கோவை மாவட்டம், துடியலூர் - கனு வாய் செல்லும் சாலையில்  தலித் மக்கள்  பயன்பாட்டில் பொது மயானம் உள்ளது.  இதன் அருகே நீலகிரி கார்டன் என்கிற  ரியல் எஸ்டேட்டாளர்கள் வீடு அமைக்க  நிலம் பிரித்து விற்பனை செய்து வருகின் றனர்

இந்நிலையில், நிலத்தை அதிக  விலையில் விற்க, அருகில் இருந்த மயா னத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தற்போது ரியல் எஸ்டேட் உரிமை யாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். சுமார் 80  வருடத்திற்கு மேலாக  தலித் மக்கள் பயன்படுத்தி வந்த மயா னத்தில் புதைக்கக்கூடாது என எதிர்ப்பு  தெரிவித்த சம்பவத்தை தொடர்ந்து,  சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

 இந்நிலையில் புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு அளித் தனர். இதில் தலித் மக்கள் பயன்படுத்தி வரும் 65 சென்ட் மயான நிலத்தை மீட்டுக் கொடுத்தும், இந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து தலித் மக்கள் தொடர்ந்து பயன்ப டுத்திட வசதி ஏற்படுத்திட வேண்டும் என வும் கோரியிருந்தனர்.

முன்னதாக, இம்மனுவினை பாதிக்கப் பட்ட மக்களோடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணை பொதுச்செய லாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.கேசவமணி, தீ.ஒ.மு. மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, மாதர் சங்க  பெரியநாயக்கன் பாளைய ஒன்றிய செயலா ளர் விஜயா ஆகியோர் அளித்தனர்.