tamilnadu

img

ஊடகத்தின் குரல்வளையை நசுக்காதே உ.பி. அரசை கண்டித்து ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.5 –  தலித் பெண்ணின் கொடூர கொலை குறித்த தடயங்களை மறைக்கும் நோக்கத்தோடு ஊடகத்தின் செயல்பாட்டை தடுக்கும் உ.பி. மாநில அரசை கண் டித்து கோவையில் அனைத்து ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வல்லு றவு மற்றும் வன்கொலை செய்யப்பட் டார். இறந்த அப்பெண்ணின் உடலைக் கூட உறவினர்களிடம் வழங்காமல் காவல் துறையினரே எரித்த செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி னர்.

அதையும் தாண்டி செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல் துறையினர் தடுத்து நிறுத்தி,  தாக்கி அப் புறப்படுத்தினர். இவ்வாறு ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் மிக மோசமாக செயல் படும் உ.பி. மாநிலத்தை ஆளும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர் கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில்  ஊடகவியலாளர்கள்  ஏராளமா னேர் பங்கேற்று உ.பி. அரசையும், காவல் துறையையும் கண்டித்தும்,  ஊடகவியலா ளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.