tamilnadu

img

கைத்தறி நெசவாளர்களின் கூலியை குறைக்காதே

 சிஐடியு கண்டனம்

திருப்பூர், மே 20 – திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெச வாளர்களுக்கு தனியார் ஜவுளி உற்பத்தி யாளர்கள் ஒப்பந்தப்படி வழங்கி வந்த கூலியைக் குறைத்துக் கொடுப்பதற்கு சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் என். கனகராஜ் திங்களன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் தனியார் துறையில் கோரா பட்டு மற்றும் சில்க் சேலைகளை நெசவு செய்து கூலி பெற்று வாழ்ந்து வருகின்ற னர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 50 நாட்களாக எந்த வேலையும் நடைபெற வில்லை. தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த் தப்பட்டுள்ள நிலையில், நெசவாளர்கள் நெய்த சேலைகளை இருசக்கர வாகனம் மூலம் கைத்தறி உற்பத்தியாளர்களிடம் கொண்டுபோய்க் கொடுக்கின்றனர்.

இந்த சேலைகளுக்கு கூலி கொடுக்கும் போது ஏற் கனவே கொடுத்து வந்த கூலியில் ஒரு சேலைக்கு ரூ.300 வீதம் குறைத்துக் கொடுக் கின்றனர். இது இயற்கை நீதிக்கு எதிரான நடவடிக்கை ஆகும். ஏற்கனவே அவிநாசி வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்துக்கும், கோவை மண்டல ஜவுளி உரிமையாளர் சங்கத்துக்கும் இடையில், ஏற்கனவே கொடுத்த கூலியைக் குறைக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக ஒப்பந் தம் உள்ளது. அதையும் மீறி தற்போது  புளியம்பட்டி மற்றும் சாவக்கட்டுப்பாளை யத்தில் உள்ள கைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் வழங்கி வந்த கூலியை ரூ. 300 வீதம் குறைத்து வழங்குவது கண்டனத் திற்குரியது. எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து விசாரித்து ஏற்கனவே வழங்கி  வந்த கூலியைக் குறைக்காமல் கைத்தறி நெச வாளர்களுக்குக் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூலிக் குறைப்பை கண்டித்தும், நிர்ணயித்த கூலியை  வழங்க வலியுறுத்தியும் காங்கேயம் புலிக்கல்மேடு பகுதியில் புதனன்று சிஐ டியு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு கைத்தறி நெசவாளர்சங்கத் துணைத் தலைவர் கே. திருவேங்கடசாமி தலைமை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள் ராம நாதன், விஜயலட்சுமி ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான நெசவாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.