சிபிஎம், அனைத்து தொழிற்சங்கம் ஆவேசம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கல் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று ஆவேச முழக்கங்ளை எழுப்பினர்.