tamilnadu

img

தங்கநகை தொழிலாளர்களை திருடர்கள் போல் பாவிப்பதா!

கோவை, ஜூலை 23- தங்கநகை தொழிலாளர்களை திருடர்கள் போல பாவிக்கும் மின் வாரியத்தைக் கண்டித்து தங்க நகை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  வீட்டில் இருந்தபடியே தங்க நகை தொழில் செய்யும் போது ஏற்படும் மின்சார செலவை வீட்டு உபயோகத்தின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்கிற சலுகை அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால் மின்வாரியம் அதிரடியாக இத்தொழில் செய்பவர்களிடத்தில் வணிக ரீதியான அபராதம் விதிப்ப தோடு, இத்தொழில் செய்பவர்களை திருடர்கள்  போல பாவிப்பது நடை பெறுகிறது. இதுபோன்ற அத்து மீறல் நடவடிக்கையை மின்சார வாரியம் கைவிட வேண்டும்.  தங்க பட்டறைக்கு மின்சாரம் 3-ஏ1 சிறு தொழிலுக்கு வழங்குவது போல் வழங்க வேண்டும். தங்கநகை பேக்டரிகளிலும், யூனிட்டுகளிலும் தொழிலாளர் நலச்சட்டத்தை அமல் படுத்த வேண்டும். இத்தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தங்கநகை தொழிலாளர் யூனியன் சார்பில் கோவை காந்திபார்க்கில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு கோய முத்தூர் தங்கநகை தொழிலாளர் யூனியன் மாவட்ட துணை தலை வர் பழவேசம் தலைமை தாங்கி னார். பொதுச்செயலாளர் பி.சந்தி ரன், சிஐடியு மாநில துணை தலை வர் எஸ்.ஆறுமுகம், ஆட்டோ சங்க செயலாளர் பி.கே.சுகுமாறன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் ஆகியோர் உரையாற்றினர்.  முன்னதாக தங்கநகை தொழி லாளர்களின்  கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை  எழுப்பினர். இதில் தங்கநகை தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் என்.எம்.கண்ணன் மற்றும் கோபால், மருதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.