அவிநாசி, ஜூன் 9- அவிநாசி அடுத்த கருமா பாளையத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடை பெறுவதைத் தடுக்காமல் அலட்சியம் காட்டும் வட் டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். அவிநாசி ஒன்றியம் கருமாபாளையம் ஊராட்சி யில் உள்ள குட்டையில் சுமார் 30 அடி ஆழம் வரை மண் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதுஅதேபோல வேட்டுப்பாளையம் ஊராட்சி சுண்டைக்கா பாளையம் செல்லும் சாலையிலுள்ள குட்டையில் பல நாட்களுக்கு முன்பு கணக்கிட முடியாத அளவிற்கு மண் கொள் ளையடிக்கப்பட்டு பாறைகளாக காட்சி அளிக்கிறது. தெக்கலூர் ஊராட்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் பத்தடி ஆழத்திற்கு மண் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதேபோல அவிநாசி ஒன்றி யங்களில் பல்வேறு பகுதிகளில் மண் தொடர் கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறு கையில், அவிநாசி ஒன்றியங்களில் தொடர்ந்து மணல் கொள்ளை நடை பெற்று வருகிறது. இக்கொள்ளையை வட்டாட்சியர், பொதுப்பணித்துறை, கனிம வளத்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சரிவர கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கனிம வளத்துறை யினர் சோதனையில் டிப்பர் லாரிகளை பிடித்தனர். இந்த டிப்பர் லாரிகள் வட்டாட் சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக் கப்பட்டது. அவற்றில் சில டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மற்ற டிப்பர் லாரிகள் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், இரு வருடங்களுக்கு முன்பு மணல் கொள்ளையைத் தடுக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் குளம், குட்டைகளில் ஆய்வு மேற்கொண்டனர். எந்த அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றது என்பதை மதிப்பீடு செய்யப்பட்டது. அதுமட்டு மின்றி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்ததையும் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து மணல் கொள்ளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவ டிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் அவிநாசி ஒன்றிய பகுதியில் மணல் கொள்ளை அதிகரித்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சி எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.