திருப்பூர், டிச. 21 - திருப்பூர் மாவட்டத்தில் 250 வாக் குச்சாவடிகள் பதற்றமானவை, அங்கு மூன்று விதமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க.விஜயகார்த்திகே யன் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக சனியன்று மாவட்ட ஆட்சியர கத்தில் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப் பூர் மாவட்டத்தில் 156 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை, 94 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 30 வாக்குச்சாவ டிகளை இணையதள கண்காணிப்பு மூலமும், 100 வாக்குச்சாவடிகளில் வீடியோ மூலமும், 120 வாக்குச்சாவடி களில் நுண் தேர்தல் மேற்பார்வை யாளர்கள் மூலமும் கண்காணிப்பு மேற் கொள்ளப்படும் என்றார்.
வாக்காளர் பட்டியல்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களுக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இதுவரை தரப் படவில்லை என்று கூறப்படுவது பற்றி கேட்டபோது, டிசம்பர் 23ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்த ரவுப்படி வாக்காளர் பட்டியல் வெளியி டப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கா ளர் பட்டியலின் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் பற்றிய துணை பட்டி யல் வெளியிடப்படும். இணைய தளத்தின் வழியாக வாக்காளர் பட்டி யலைப் பார்க்கலாம் என்று ஆட்சியர் கூறினார். இந்த தேர்தலுக்கு 2019 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் என்ற அடிப்படை யில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட் டது.
வாக்குச்சாவடி சீட்டு
வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) கொடுக்கும் பணி தொடங்கிவிட்டது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் காவலர்க ளுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கு தாராபுரம் சார் ஆட்சியர் தலைமை யில் அலுவலர்கள் குழு அமைக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடு வோருக்கு உரிய நேரத்தில் தபால் வாக்குச் சீட்டுகள் கிடைக்க இக்குழு வினர் பணியாற்றுவர். கட்சி அடிப்படையில் இல்லாமல் தேர்தல் நடைபெறும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்குச் சீட்டுகளை ஊராட்சி ஒன்றியங்களுக் குப் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்று வரு கிறது. இரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும் படை என்ற அளவில் மொத்தம் 7 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அத்துடன் 24 மணி நேரம் செயல்படும் 21 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
வாக்குப் பதிவு முடிந்தபின் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப் பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்ப டும். ஜனவரி 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1800 425 7023 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இத்துடன் 13 ஒன்றியங்கள் அளவிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல் படும், அதற்குரிய தொலைபேசி எண்களும் பொது மக்களுக்குத் தெரி விக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.