அன்னூர், அக். 15- அன்னூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரூராட்சி பகுதிகளில் நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் அன்னூர் பேரூராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவமனை சித்த வைத்திய பிரிவுடன் இணைந்து பேரூராட்சி பகுதிக்குட் பட்ட 13 மையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர் யசோதா, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கார்த் திக், தர்ஷன், ரஞ்சித், காலித், ரஹமத்துல்லா, கோகுல், இப் ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.