tamilnadu

img

துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்திடுக இந்திய மாணவர் சங்கம் ஆவேசம்

கோவை, அக். 16 – அண்ணாப் பல்கலைக்கழ கத்தை மத்திய அரசிடம் தாரை வார்க்க முயலும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழ கம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அண்ணாப் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறை வேறியுள்ள நிலையில், அதனை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இச்சூழ லில், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், கல்விக் கட்டணம் உள்ளிட்டு பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக் கொள்ள லாம் என்றும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதனை கண்டித்தும், மாநில அர சைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசிற்குக் கடிதம் எழுதிய துணை வேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவியிலிருந்து நீக்கிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவினை மாநில அரசு கைவிட வேண்டும்.

மாநில உரிமைகளை பறிக்கக்கூ டாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட பலர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலை வர் ஏ.டி.கண்ணன், மாவட்ட செய லாளர் ஆர்.கவின்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.