கோவை, அக். 13 - சாக்கடை கழிவை அகற்றுவதில்கூட கோவை மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சத் துடன் நடந்து கொள்வதாக அருந்ததிய மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோவை மாநகரம் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த பழையூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள தண்டாயுதபாணி தெருவில் 450 -க்கும் மேற்பட்ட அருத்ததிய மக்கள் வசித்து வரும் நிலையில், தங்கள் பகுதியில் மட்டும் சாக் கடை கழிவுகளை அகற்றுவதற்கு மாநக ராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவ தாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்ற னர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தெரி விக்கையில், நாங்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம்.
இங்கு சாக்கடைக் கழிவு தேங்கும் பகுதியும், குடி நீர் குழாயும் ஒரே இடத்தில் தான் அமைந்துள் ளது. இத்தகைய சூழலில், சாக்கடை அடைப் புகளை அகற்றி கழிவுகளை அப்புறப்படுத்து வது என்பது பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து மாநக ராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆனால், எங்கள் பகுதிகளைச் சுற்றி யுள்ள மற்ற குடியிருப்புப் பகுதிகளில் இப் பிரச்சினை இல்லை. அப்பகுதிகளில் சுத்தம் செய்வதற்கான பொருட்களை எங்கள் வீதி களுக்கு வந்து எடுத்துச் செல்லும் மாநக ராட்சி ஊழியர்கள், இங்கு எப்போது சுத்தம் செய்வீர்கள் எனக்கேட்டால் முறையான பதிலளிப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு பாரபட்சமாக செயல்படுவது வேதனையளிக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.