இந்திய வரலாற்றை உருவாக்கம் செய்யக் கல்வெட்டு மிகச் சிறந்த முதன்மைச் சான்றாக விளங்குகி றது. கல்வெட்டு என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக் கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்து படிக்கும் ஓர் ஆவணம் ஆகும். கல்வெட்டுச் சான்றுகள் மூலம் பண்டைய வர லாறு, மொழியியல், சமூகவியல், அர சியல், பொருளாதாரம் போன்ற வற்றை நாம் அறிய முடிகிறது. கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு அக்கால மக்களின் கருத்தி னைத் தாங்கி நின்ற குறியீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளன. குறி யீடுகளுக்கு அடுத்துக் கிடைக்கும் வரி வடிவம் தமிழ் பிராமி ஆகும். தமிழ் பிராமி எழுத்து வடிவம் தமிழ கத்தில் கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி நான்காம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தது. கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் இவ் வரி வடிவம், தனது அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. கி.பி ஐந்தாம் நூற் றாண்டில் இவ்வெழுத்து வட்ட வடிவ தன்மையினைப் பெற்றது. அதனால் இவ்வெழுத்து வட்டெழுத்து என அழைக்கப்பட்டது. கி.பி 11ஆம் நூற்றாண்டு வரை இவ்வட்டெழுத் துக்கள் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தன. கி.பி பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஏற் பட்ட சோழப் பேரரசு வட்டெழுத் துக்கு மாற்றாக தமிழ் எழுத்துக ளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. சோழப்பேரரசு தமிழகம் முழுவதுமாக மாமன்னன் ராஜராஜ சோழன் தலைமையில் விரிவடைந் தது. அதற்குப்பின் தமிழ் எழுத்தைத் தமிழகம் முழுவதுமான ஒரே சீரான வரி வடிவமாக ஏற்படுத்தினர். ஒரு சில மாற்றங்களுடன் இந்தத் தமிழ் எழுத்துக்கள் இன்றுவரை தமிழ கத்தில் தொடர்கின்றன.
தமிழகத்தில் கிரந்த எழுத்து
“கிரந்தம்” என்ற சொல் வட மொழியில் நூல் என்று பொருள் படும். எனவே நூலை எழுதுவதற்கு அடிப்படையாக உள்ள எழுத்தை யும் கிரந்தம் என்றே குறிப்பிடு கின்றனர். தமிழ்க் கல்வெட்டுகளில் வடமொழிச் சொல்லைப் பயன் படுத்த நேருகின்ற பொழுது அவ் வடமொழிச் சொற்களுக்குரிய வரி வடிவங்கள் தமிழில் இல்லாததால் இவற்றை எழுத கிரந்த எழுத்தை தமிழ்நாட்டில் பயன்படுத்தி இருக் கின்றனர். தமிழகத்தில் இவ்வெழுத் துக்கள் பல்லவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வெழுத்துக்கள் தமிழகத்தில் கி.பி நான்காம் நூற் றாண்டு முதல் நாயக்கர் காலம் ஆன கி.பி பதினேழாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்தன. இந்நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறி யாளர் சு.ரவிக்குமார், க.பொன்னு சாமி, ரா.குமரவேல், சு.சதாசிவம், ரா.செந்தில்குமார் ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வின்போது கரூருக்கு 12 கிலோமீட்டர் மேற்கே அரவக்குறிச்சி வட்டத்தில் க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரில், 1100 ஆண் டுகள் பழைமையான கிரந்த கல் வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள் ளனர். இதைப் பற்றி ஆய்வு மைய இயக் குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தில் வரலாற்றுச் சிறப் புமிக்க ஊர்களில் கருவூரும் ஒன்று. கரூர் பண்டைய நாளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது. வடக்கில் கங்கைச் சமவெளியில் இருந்து வந்த தட்சிண பதம் (இன்றைய பெருவழி - 7) கன்னியாகுமரி வரை சென்றது. இப் பெருவழியைப் பற்றிக் கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேற்குக் கடற்கரையிலிருந்து பாலக் காட்டுக் கணவாய் வழியாக வந்த கொங்கப் பெருவழி கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை சென்றது. இவ்விரு பெருவழிகளும் கரூரில் சந்தித்தன. எனவே முதலில் வேளிர் களின் தலைநகராக இருந்த கரூர், சங்க காலத்தில் சேர வேந்தர் படை யெடுப்பில் சேர அரசர்களின் தலை நகரமாக நிலைபெற்றது. எனவே வட இந்தியாவுடன் ஏறத்தாழ 2300 ஆண்டுகளாகக் கரூருக்கு தொடர்பு இருந்துள்ளது. இங்கு நமக்குக் கிடைத்துள்ள கல் வெட்டு 110 செ.மீ உயரமும், 43 செ.மீ அகலமும் கொண்டதாகும். ஆறு வரிகளில் கிரந்த எழுத்துக்கள் இதில் உள்ளன. இந்த வகை எழுத்துக்கள் உள்ள இந்தக் கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு மற்றும் குளம் ஆகியவை காட்டப் பட்டுள்ளது என்றார்.
மந்திரக் கல்வெட்டு
இக்கல்வெட்டை வாசித்த வர லாற்றுப் பேரறிஞர் பேராசிரியர் முனைவர் ஏ.சுப்புராயலு கூறிய தாவது, பொதுவாகத் தந்திர வழி பாட்டோடு தொடர்புடைய எழுத் துகள், உருவங்கள் ரகசியமாகவே போற்றப்படும் இங்கும் அவ்வாறே காணப்படுகின்றன. இதில் ஒரு வரி படிக்கக் கூடிய நிலையில் இல்லை. மற்ற வரிகளில் 1. வ், 2. - - -, 3. ஸ்ரீ, 4. ஹடஸ்ஸராஹா, 5. வ்யஹம்ஸ்ம்ருது, 6. ஓம் கிம் ஹ்தம் ஹதம் என்று உள்ளது. எழுத்து அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது கி.பி 10 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்ததாகும் என்று பேரா சிரியர் சுப்பராயலு தெரிவித்தார். -(ந.நி)