வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குக
விவசாய தொழிலாளர் சங்க பேரவையில் தீர்மானம்
தருமபுரி, பிப்.26- வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவசமனைப் பட்டா வழங்குமாறு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பாப்பிரெட்டிபட்டி, நல்லம்பள்ளி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். இதில் மகாத்மா காந்தி தேசிய வேலைஉறுதி யளிப்புத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். இத்திட்டத்தில் பணிபுரியும்தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 250 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். வீடற்ற ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா, அரசு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். 60 வயது முதிர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கவேண்டும். வீடற்றவர்களுக்கு இலவசமனைப் பட்டா வழங்கி வீடுகட்டுவதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யவேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.ஓகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் வழங்கவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டசெயலாளர் எம்.முத்து, மாவட்ட பொரு ளாளர் இ.கே.முருகன், ஒன்றியத் தலைவர் பெருமாள் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் சி.வஞ்சி, அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.கிருஷ்ணவேணி,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.தீர்த்தகிரி ஆகியோர் வாழ்த்திபேசினர். இதைதொடர்ந்து பாப்பிரெட்டிபட்டி வட்டதலைவ ராக எம்.செல்வம், வட்டச் செயலாளராக எம்.கணேசன், பொருளாளராக இளவரசி உள்ளிட்ட 15 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வுசெய்யப்பட்டது.
நல்லம்பள்ளி
இதேபோல் நல்லம்பள்ளியில் நடைபெற்ற பேரவை கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கே.எல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்து சிறப்புரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி விவசாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் எம்.மணி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் மாலா ஆகி யோர் வாழ்த்திபேசினர். இப்பேரவையில்நல்லம்பள்ளி ஒன்றியத் தலைவ ராக சிவசந்திரன்,ஒன்றியச் செயலாளராக எல்லப்பன், பொருளாளராக அண்ணாதுரை உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியகுழு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப் பட்டனர்.
உழவர் அட்டை: சிறப்பு முகாம்
ஏற்காடு, பிப்.27- உழவர் அட்டைக்கு விண்ணப்பிக்க ஏற்காட்டில் சிறப்பு முகாம் பிப்.27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டம், ஏற் காட்டில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயி களுக்கு கிசான் கார்டு விண் ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஏற் காடு வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, உழவர் அட்டை பெற விண்ணப் பிப்பதற்கு ஏற்காடு அண்ணா பூங்காவில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிப் பதற்கு பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் இரண்டு பாஸ் போர்ட் சைஸ் புகைப் படத்துடன் முகாமில் பங் கேற்று விண்ணப்பிக் கலாம். இது குறித்த சந் தேகங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயபிரகாஷை 99944–01148 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத் துறை யினர் தெரிவித்துள்ளனர்.