பொதியம்பள்ளம் அணைக்கட்டு கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
தருமபுரி, ஆக.20- கடத்தூரில் பொதியம்பள்ளம் அணைக் கட்டு கால்வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கடத்தூரில் பொதியம்பள்ளம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து கடத்தூர் வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மடதள்ளி ஏரி, போசிநாய்க்கன்ஹள்ளி ஏரி, வெங்கடதாரஹள்ளி ஏரி, கடத்தூர் ஏரி உள்பட 18க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு மழை நீர் செல்வதற்கான கால்வாய் வசதிகள் உள்ளன. கடந்த 2003ஆம் ஆண்டு ரூ.86.38 லட்சம் மதிப்பீட்டில், பொதியம்பள்ளம் அணைக்கட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், அணைக் கட்டில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் முள்புதர்கள் மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்கட்டில் இருந்து மழைக்காலங் களில் மழைநீர் ஏரிகளுக்கு செல்வது தடை ஏற்படும் நிலையுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், ஏரிகளில் மழைநீரை சேமிக்கும் வகையில், கடத்தூர் பொதியம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் களை தூய்மை செய்ய பொதுப்பணித் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மான் வேட்டையாடியவர் கைது
தருமபுரி, ஆக.20- அரூர் அருகே மான் வேட்டையாடியதாக ஒருவரை வனத்துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், பொய்யப்பட்டி வனப் பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரகர் தீ. கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் வாதாப் பட்டி, செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, கீழானூர் வனப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரடித்தடம் வனப்பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், அவர் முத்தானூரைச் சேர்ந்த ஜடையன் மகன் தங்கம் (37) என்பது தெரியவந்தது. இவர் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சி களை விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை வனத்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 2 கிலோ மான் இறைச்சியையும் பறி முதல் செய்தனர்.
நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஆக. 20– சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நிலக் கடலை ஏலம் நடந்தது. இதில் ரூ.2.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 94 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரத்து 800 முதல் ரூ. 7ஆயிரத்து 100 வரையிலும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6ஆயிரத்து 300 முதல் ரூ.6ஆயிரத்து 800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ,5 ஆயி ரத்து 600முதல் ரூ.6ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. இதில்4 வியாபாரிகள், 21 விவசாயிகள் பங்கேற் றனர்.
வேளாண்மை கருவிகள் விவசாயிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
தருமபுரி, ஆக.20- விவசாயத்தில் குறித்த காலத்தில் பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறி யியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டு நடப்பு நிதியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்தி ரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. பவர் டில்லர், விசைக் களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, சுழற் கலப்பை (ரோட்டவேட்டர்), கொத்துக்கலப்பை, விதை விதைக்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட ஹைட்ராலிக் வார்ப்பு இறகுக் கலப்பை, தட்டை வெட்டும் கருவி, நிலக் கடலை தோண்டும் கருவி, பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், கரும்பு கட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, டிராக்டர் டிரெய்லர், தென்னை ஓலை துகளாக்கும் கருவி முதலானவற்றிற்கும் அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயி களுக்கும், இதர விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாகவும் வழங்கப்பட உள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 33 டிராக்டர், 21 பவர் டில்லர், 10 கொத்துக் கலப்பை, 49 ரோட்டவேட்டர் மற்றும் வாடகை மையங்கள் அமைக்க ரூ.40 லட்சம் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தருமபுரி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ), அறிவழகன் அலைபேசி எண்: 94432 67032 மற்றும் அரூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ), ஜெயக்குமார் அலைபேசி எண்: 94432 43495-ல் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார்.