tamilnadu

img

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

ஈரோடு, ஜூலை 13- தேவி பிரசாத் சட்டோ பாத் யாயா நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலக கூட்டரங்கில், மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தின் நூறாவது அமர்வு மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத் யாயா நூற்றாண்டு சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசி வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஆர்.கோமதி வரவேற்றார்.இதில் கலந்து கொண்டு வலதுசாரி அரசியலும்,  நமது கடமைகளும் என்ற தலைப் பில் மாநில செயற்குழு உறுப்பின ரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக் கூர் ராமலிங்கம் கருத்துரையாற்றி னார். மார்க்சியம் வெல்லும் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் மாத  இதழ் ஆசிரியருமான என்.குண சேகரன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா வாழ்க்கையும், பணிகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் இரா.முரளி சிறப்பு ரையாற்றினர்.  இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் இரா.முரளி எழுதிய தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா-ஓர் அறிமுகம் என்ற நூல் வெளியிடப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் பெற்றுக் கொண் டார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன் , மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு  உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வாசகர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக வாசகர் வட்ட பொரு ளாளர் என்.ராமசாமி நன்றி கூறி னார். முன்னதாக எ.எம்.காதர் நினைவு கலைக்குழு, ஊஞ்சலூர் கலைக்குழு மற்றும்சிந்து பாரதி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.