tamilnadu

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிடுக- மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்

சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்துள்ள அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் விரைந்து அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சத்தியமங்கலம் பூ விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பூக்களுக்கு உரிய விலையை நிர்ணயித்திட வேண்டும். தூய்மைப் பணியாளர் பாலன் (எ) பாலசுப்பரமணியன் மரணத்திற்கு உரிய நீதியும், முதல்வர் அறிவித்த ரூ.50 லட்சம் நிவாரணமும் வழங்கிட வேண்டும். மாற்றுதிறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு ரூ.5000 நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் முழுவதும் 225 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக் கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.

;