பேரிடர் காலத்திலும் சாதி வெறியை கிளப்பிவிடும் சாதிய ஆதிக்க சக்திகளை கண்டித்தும், கொரோனா பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.